2022 இல் இருந்து பகுதி பகுதியாக உடைந்த விழுந்து மிக ஆபத்தான நிலையில் இருந்த 380 அடி நீளமான மைதான வடக்குபக்க சுவரானது
பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளுக்கிணங்க பழைய மாணவரும் TCT நிறுவன தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களின் நிதி அனுசரணையில் மீளகட்டப்பட்டு கடந்த புதன்கிழமை (17/12/2025) முற்பகல் 10:15 க்கு நன்கொடையாளரால் நினைவுகல் திரை நீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது
இந்த நிகழ்வுக்கு பாடசாலை சமூகத்தினர் அனைவரும் வருகை தந்து சிறப்பித்திருந்தனர்
இந்த மகிழ்வான தருணத்தில் ஏறத்தாழ 50 லட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த இந்த மதிலை நன்கொடையாக கட்டிதந்த
உலகறிந்த நன்கொடையாளரும் எமது பழைய மாணவரும் தியாகி அறக்கட்டளை நிறுன தலைவருமான திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்களுக்கு பாடசாலை சமூகத்தின் சார்பில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

























