“2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகத்திற்கு தகைமை பெற்றுள்ள மாணவர்களின் விபரங்கள்”
- Published in Acadamic, Achievement, School
“2020ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்குமான பிரிவுபசார நிகழ்வும் பொற்கிழி வழங்கும் நிகழ்வும் “
2020 ஆம் ஆண்டிற்கான பாடசாலையில் இருந்து இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களுக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு மாண கௌரவிப்பு விழா பொற்கிழி வழங்கும் நிகழ்வினையும் யாழ்மத்தியகல்லூரி வெகு விமர்சையாக கொண்டாடியது.
இன்று ஓய்வுபெறுகின்ற பிரதி அதிபர் திரு. R. திரவியநாதன் ஐயா அவர்களின் பிரியாவிடை நிகழ்வு
மத்திய கல்லூரி பல மேதமை பொருந்திய தலைமைத்துவம் கொண்ட ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்ட சமூகம் சார்ந்த தேசிய கல்லூரி ஆகும். இவ் தலைமைத்துவ ஆளுமைகளில் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் வகிபாகத்தில் தன்னை உள்ளுறுத்தி அர்ப்பணிப்புடன் பணிசெய்த எம்முடைய பிரதி அதிபர் திரு. இ.திரவியநாதன் என்றும் பாராட்டுக்குரியவர் யாழ்ப்பாணத்தின் பெருமை பொருந்திய தீவகப்பரப்பில் குறிப்பாக நயினாதீவில் பிறந்து அங்கேயே ஆரம்பக் கல்வியையும் இடைநிலைக் கல்வியையும் முடித்துக்கொண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தினையும், தன்னுடைய முதுகலைமாணி பட்டத்தினை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும்
“இணையத்தள பயன்பாட்டிற்காக பழைய புகைப்படங்களை சேகரித்தல்”
200 ஆண்டுகளை கடந்து எமது கல்லூரியானது கல்வியிலும்,விளையாட்டிலும் பல்லாயிரக்கணக்கான மேதைகளையும், சாதனையாளர்களையும் உருவாக்கியிருப்பது பலரும் அறிந்த விடயமே, அதேபோன்று விளையாட்டுத் துறைக்கான ஒரு தனியான இடத்தினையும் எமது கல்லூரியானது பிடித்திருப்பதையும் எம்மால் கவனிக்கக் கூடியதாக உள்ளது. அந்த வகையில் இக் கல்லூரியில் கல்வி பயின்ற பழைய மாணவர்கள், கல்லூரியுடன் தொடர்புபட்டவர்கள் அனைவருக்கும் வெளிப்படைத் தன்மையுடன் ஒரு வேண்டுகோளாக முன் வைப்பது யாதெனில் “இணையத்தள பயன்பாட்டிற்காக” தாங்கள் ஏலவே இக்கல்லூரியில் படிக்கின்ற, வேலை செய்த, காலங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்
- Published in News
“எமது கல்லூரியின் ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களின் 60வது ஆண்டு மணி விழாவும் பிரியாவிடை நிகழ்வும்”
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர் சேவை என்பது இறை சக்திக்கு நிகராகப் போற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 33 வருடங்கள் ஆசிரிய சேவையை வழங்கி நிறைவாக பூர்த்தி செய்து ஓய்வு பெறுகின்ற விஞ்ஞான பாட ஆசிரியை திருமதி சயந்தி கருணாகரன் அவர்களை வாழ்த்தி இச்செய்தியினை வழங்குவதில் அகமகிழ்ந்து கொள்கின்றேன் மாணவனை வேலை உலகிற்கு ஆற்றுப் படுத்துவதில் விஞ்ஞான பாடத்திற்கு முக்கிய பங்கு உண்டு ஆசிரியர் விஞ்ஞான பாடத்தை திறம்பட கற்பித்து சிறந்ததொரு மாணவ சமுதாயத்தை உருவாக்கியுள்ளார்
“கல்வி தொடர்பான சமூக இடைவெளியுடன் கூடிய திட்டமிடல்களும் கலந்துரையாடல்களும்”
Covid-19 நோய் நிலைகளின் காரணமாக கல்வி முன்னெடுத்தல் திட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுடன் பாடசாலை தொடர்ந்தும் செயற்படவேண்டிய தேவைபாட்டில் உள்ளது. இவை தொடர்பான திட்டமிடல்களை ஆசிரியர்களினதும் , மாணவர்களினதும் ஒத்துழைப்புடன் கல்லூரி முன்னெடுத்துச் செல்கின்றது. இன்றைய தினம் மாணவர்களது கல்வி நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து வினவுகின்ற வகையில் தந்தை செல்வா அரங்கில்சமூக இடைவெளியை பேணி மாணவர்களுடன் கல்லூரி முதல்வர் கலந்துரையாடினார்.
“பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை மாதிரி வினாத்தாள்கள் வழங்கிவைப்பு”
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவன் திரு K. முத்துக்குமார் ( பிரான்ஸ்) அவரது தாயாரின் நினைவாக பொன்மணி அறக்கட்டளை அமைப்பினூடாக இலங்கை முழுவதுமாக உள்ள பாடசாலைகளுக்கு கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கான மாதிரிப் பரீட்சை வினாத்தாள்களை ( கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம்) இலவசமாக வழங்கினார். அந்த வகையில் 19.01.2021 அன்றைய தினம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் வினாத்தாள்கள் வழங்குகின்ற நிகழ்வு கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ். கே. எழில்வேந்தன் தலைமையில் இடம்பெற்றது. வழங்கி
“The emblem of our college opening ceremony”
The emblem of our college of majesty and honor was displayed in a very majestic manner in the romaine hall of our college in the pre-1990s. The Romain Hall was completely destroyed in the ensuing war. After that, only the small emblem of the college was fitted. Mr. Muralitharan, an alumnus of our college
“சாதனையாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த்தின் கௌரவிப்பு விழா”
மத்திய கல்லூரியின் விளையாட்டுத் துறை சார்ந்த இலக்குகளை சாதனைகளாக மாற்றுகின்ற மாணவர்களை கௌரவித்து வாழ்த்துவதன் மூலம் மேலும் சாதனை வீரரை உற்சாகப்படுத்துவதோடு தொடர்ந்து முனைப்போடு இயங்குகின்ற ஏனைய மாணவர்களையும் சாதனையாளர்களாக மாற்றுகின்ற தூண்டலை மத்திய கல்லூரி சிறப்பாக முன்னெடுக்கின்றது. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கால் பதித்து தனது திறனை வெளிப்படுத்திய செல்வன்.விஜயகாந்த் வியாஸ்காந்த் அவர்ளையும் அவரது பெற்றோர்களையும் கௌரவித்து வாழ்த்துவதற்காக எமது கல்லூரி இன்று விழாக்கோலம் பூண்டது. கல்லூரியின் முதல்வர் கலாநிதி எஸ் கே எழில்வேந்தன்
- Published in Achievement, Gallery, News, Sports
இணையத்தளம் மீள் அறிமுக விழா
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தனது jcc.lk எனும் இணையத்தளத்தின் ஊடாக மீண்டும் சமூகத்துடன் பொதுவெளியில் இணைவது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது… 14.01.2021 இன்றைய தினம் பாடசாலை அதிபரின் தலைமையில் இணையத்தளம் மீள் அறிமுக விழா இடம்பெற்றது. தொடர்ந்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இணையத்தளத்தின் செல் நெறி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது. இதன்போது பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதி உப அதிபர்கள் பகுதித் தலைவர்கள் இணைய துறை சார்ந்த வடிவமைப்பாளர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
- Published in Achievement, Gallery, News












